கற்களை சிற்சமயம்
இரக்கமின்றி வதைக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள்.
சிற்பமாக வேண்டிய சிதைவுகள்
சிற்பியின் சிந்தனைச் சுவட்டில்.
உளிகளின் தாளம்
கற்களின் மௌனம்
படர்கின்ற காற்றின் நிதானம்
கருக்கொள்ளும்
எங்கிருந்தோ வந்து
ஒளிந்த சிற்பம்.
கற்பிழக்கத் தயாரான கல்லும்
கற்பழிக்கத் துடித்த உளிகளும்
இந்த
சிற்பக்கூடத்தில் பெற்ற
புண்ணிய அனுமதி.
விளைவது விக்கிரகம் என்னும்போது
கற்பிழப்பு பற்றி
கடவுளும் கண்டு கொள்வதில்லை.
சரவணன். கா
You can also visit www.solitaryindian.blogspot.com to read my writings in English