மௌனமாய் மறைந்து போனவளே !
நகர்கின்ற நாட்களில் புதைந்திருந்த
என் அறிவுக்கெட்டாத
வாழ்க்கையின் சிதிலங்கள்
உன்னைக்கண்ட பின் தான்
அர்த்தம் பெற்றதைப் போல இருக்கின்றன.
நின்று கொண்டே கழிந்து போகும்
இந்த மானுடத்தின்
தற்காலிக மயக்கங்கள்
நிரந்தரமாகத் தோற்றம் கொண்டது
உன்னுடைய நிழழில் கீழ்
நானிருக்க விரும்பியதால்தான்...
சொல்லாத ஒன்று காதலாவதில்லை-
நான் உன்னிடம்
ஒன்றுமே சொல்லியதில்லை...
தொட்டுக்கொள்ளாத ஒன்று காமமாவதில்லை-
உன்னைத் தொட
நான் கனவிலும் எண்ணியதில்லை...
சொல்லாத ஒன்றை காதலாகவும்
தொடாத ஒன்றை காமமாகவும்
இரண்டுக்கும் இடைவெளி என்பது
அர்த்தமில்லாத ஒன்று என்பதை
உன்னுடன் நானிருந்த
அந்த ஒற்றை நிமிடங்கள்
இந்த உலகிற்குச் சொல்லிக்கொண்டிருக்கும்.
உன்னுடன் இருக்க நான் விரும்பியது
உன்னைப் பற்றித் தெரியாத
என் அறியாமை....
நீ என்னுடன் இருக்க விரும்பாதது
என்னைப்பற்றி நீ அறிந்த
உன் புத்திசாலித்தனம்.
நாம்
இருவருமே நம் இருவரிடம் இல்லை.
உன்னுடைய பார்வையில்
இந்த நேரம் நான் மங்கலாகியிருப்பேன்..
நினைவில் அகப்படாத உருவமற்ற
நிழழாகியிருப்பேன்;
உன்னிடம் நான் இல்லை-அது நீ விரும்பியது
என்னிடம் நீ இப்போதும் இருக்கிறாய்- இது நான் விரும்பியது
நான் சொல்லாத காதலும்
நீ சொல்லாத சொற்களும்
என்னை வாழவைத்தால்....
வைத்துவிட்டுத்தான் போகட்டுமே!
எங்கோ இருக்கிறோம்.
வாழ்வைத்தொலைத்த நிராசை
உன்னை நெரிக்காதிருக்கட்டும்.
ஏனெனில்-அது
உன் கழுத்தை நெரிக்கும்போது
மங்கலான நான்
முற்றிலும் மறைந்து போயிருப்பேன்.
அதில் உனக்கு வெட்கம் இல்லை;
நீ...அப்படித்தான்...
என்னுள் இருக்கும் நீ-
எப்போதும் பிய்த்தெறிய முடியாத
என் நகச்சதையாகவே இருக்கிறாய்.
அதில் எனக்கு வெட்கமொன்றும் இல்லை.
நான் இப்படித்தான்.
சரவணன். கா.
Also visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English
நகர்கின்ற நாட்களில் புதைந்திருந்த
என் அறிவுக்கெட்டாத
வாழ்க்கையின் சிதிலங்கள்
உன்னைக்கண்ட பின் தான்
அர்த்தம் பெற்றதைப் போல இருக்கின்றன.
நின்று கொண்டே கழிந்து போகும்
இந்த மானுடத்தின்
தற்காலிக மயக்கங்கள்
நிரந்தரமாகத் தோற்றம் கொண்டது
உன்னுடைய நிழழில் கீழ்
நானிருக்க விரும்பியதால்தான்...
சொல்லாத ஒன்று காதலாவதில்லை-
நான் உன்னிடம்
ஒன்றுமே சொல்லியதில்லை...
தொட்டுக்கொள்ளாத ஒன்று காமமாவதில்லை-
உன்னைத் தொட
நான் கனவிலும் எண்ணியதில்லை...
சொல்லாத ஒன்றை காதலாகவும்
தொடாத ஒன்றை காமமாகவும்
இரண்டுக்கும் இடைவெளி என்பது
அர்த்தமில்லாத ஒன்று என்பதை
உன்னுடன் நானிருந்த
அந்த ஒற்றை நிமிடங்கள்
இந்த உலகிற்குச் சொல்லிக்கொண்டிருக்கும்.
உன்னுடன் இருக்க நான் விரும்பியது
உன்னைப் பற்றித் தெரியாத
என் அறியாமை....
நீ என்னுடன் இருக்க விரும்பாதது
என்னைப்பற்றி நீ அறிந்த
உன் புத்திசாலித்தனம்.
நாம்
இருவருமே நம் இருவரிடம் இல்லை.
உன்னுடைய பார்வையில்
இந்த நேரம் நான் மங்கலாகியிருப்பேன்..
நினைவில் அகப்படாத உருவமற்ற
நிழழாகியிருப்பேன்;
உன்னிடம் நான் இல்லை-அது நீ விரும்பியது
என்னிடம் நீ இப்போதும் இருக்கிறாய்- இது நான் விரும்பியது
நான் சொல்லாத காதலும்
நீ சொல்லாத சொற்களும்
என்னை வாழவைத்தால்....
வைத்துவிட்டுத்தான் போகட்டுமே!
எங்கோ இருக்கிறோம்.
வாழ்வைத்தொலைத்த நிராசை
உன்னை நெரிக்காதிருக்கட்டும்.
ஏனெனில்-அது
உன் கழுத்தை நெரிக்கும்போது
மங்கலான நான்
முற்றிலும் மறைந்து போயிருப்பேன்.
அதில் உனக்கு வெட்கம் இல்லை;
நீ...அப்படித்தான்...
என்னுள் இருக்கும் நீ-
எப்போதும் பிய்த்தெறிய முடியாத
என் நகச்சதையாகவே இருக்கிறாய்.
அதில் எனக்கு வெட்கமொன்றும் இல்லை.
நான் இப்படித்தான்.
சரவணன். கா.
Also visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English